Tuesday, October 11, 2011

இந்த உள்ளாட்சித் தேர்தல் பொது மக்களுக்கு என்ன செய்யப்போகிறது ?


செப்டெம்பர் 2011வளசரவாக்கம் செய்தி மடல் என்னும் பத்திரிகையில் வந்திருப்பது மேலே காண்க. 
இந்த உள்ளாட்சித் தேர்தல் பொது மக்களுக்கு என்ன செய்யப்போகிறது ?

    வீதிகள் சுத்தமாக இருக்கப்போகிறதா ? மலை போல் குவிந்து துர் நாற்றம் வீசும் வீதியிலே அன்றாடம் குப்பைகள், சாக்கடை கழிவுகள் அகற்றப்பட‌    போகின்றனவா ?  வீதிகளின் இருபக்கங்களிலும் கையேந்தி பவன்கள் கொட்டும் மிச்ச் மீதி உணவுப் பொருட்களைத் திங்கும் நாய்கள் தொந்தரவிலிருந்து பொது மக்கள் காப்பாற்றப்படுவார்களா ?

    கொசுத்தொல்லை பரவா வண்ணம் ஒரு தடுப்பு நடவடிக்கை ஏதும் நடைபெறப்போவதா ?

    மருத்துவகங்கள் சீர் படுத்தப்படுமா ?   அங்காவது சுத்தம் இருக்குமா ?

    தண்ணீர் வரும் குழாய்கள் அவ்வப்பொழுது சுத்தம் செய்யப்படுமா ?

    என்றெல்லாம் இந்த தேர்தலுக்கு நிற்கும் வேட்பாளர்கள் ஏதேனும் சொல்லுவார்கள் அல்லது தேர்தலில் ஜெயித்தவர்கள் செய்வார்கள்    என எதிர்பார்க்காதீர்கள். ஏமாந்து போகாதீர்கள்.

    இந்த தேர்தலின் நோக்கம் அரசியல் கட்சிகளின் பலப்பரிட்சை. அதை வைத்து அடுத்த     மக்களவை தேர்தலில் சீட் பேரம், கூட்டணி அமைப்பு. 

    அதுவே !!

     பாவம் மக்கள்.

ஒன்று மட்டும் சொல்ல வேண்டும். நீங்களும் நானும் வோட் போடாமல் இருந்தாலும் பயன் எதுவும் இல்லை. அதனால் கவனமாக ஒட் அளியுங்கள். 
சிங்கார சென்னை வேண்டாம். சுத்தமான சென்னை வேண்டும்.

    கட்சி அரசியல் உள்ளாட்சி தேர்தலில் வேண்டாம் என்று சொல்கையில் , கட்சி சார்பாக நிற்பவர்களுக்கு வோட் போடவேண்டாம் என்று நான் சொல்லவில்லை.  
அவர்களில் யார் , உண்மையாக மக்களுக்காக, உள்ளாட்சி பணம் மக்கள் நலனுக்காகத்தான் செல்வளிக்கபடுகிறதா என மனசாட்சியுடன் செயல் படுவார்கள் என உங்களுக்குத் தோன்றுகிறதோ அவர்களுக்கு வாக்கு அளியுங்கள். 


     இந்த சென்னை சுத்தமாக சுகாதாரமாக நிலவுவது உங்கள் கையிலே தான் இருக்கிறது.






 
    
     
   

Saturday, September 10, 2011

Filth, Garbage and Sewage Hills at Valasaravakkam.

. நாட்டில், நமது மாநிலத்தில், ஆர்ப்பாட்டங்கள் , போராட்டங்கள் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டே இருக்கின்றன.  எதாவது ஒரு நிகழ்வு குறித்தும் போராட்டங்கள், திடீர்  சாலை மறியல்கள் நடக்கின்றன.   விழிப்புணர்வு ஊர்வலங்கள் ஆங்காங்கே நடக்கின்றன.  அண்மையில் லஞ்சத்தை எதிர்த்து, அண்ணா ஹஜாரே வை ஆதரித்து ஊர்வலங்கள் மெழுகுவத்தி கையில் ஏந்தி நடக்கின்றன. அவ்வப்போது பல நகரங்களில் மருத்துவ அகங்களில் ஏற்படும் கவனிப்பின்மை காரணமாக ஏற்படும் இறப்புகளை கண்டித்தும், சாலை விபத்துகளில் ஏற்படும் சாவுகளைக் கண்டித்தும் சாலை மறியல்கள் நடக்கின்றன.

இத்தனை எதிர்ப்புகள் மக்களின் உணர்வுகளை எடுத்துச் சொல்லுகின்றபோதிலும் அரசாங்க அலுவலர்கள் உரிய கவனம் செலுத்துகிறார்களா ?

 சுத்தத்தைப் பற்றி சுகாதாரத்தைப் பற்றி பேசுகிறோம். இருப்பினும் சாலையின் இரு பக்கங்களிலும் தினந்தோறும் சேரும் சாக்கடை கழிவுகளையும், குப்பைகளையும் அகற்றுகிறார்களா என்றால் இல்லை. அவை அங்கே சேர்ந்துகொண்டே போய், அதற்குப் பக்கத்திலே கையேந்தி பவனகள் பவனி வருகின்றன. 


 உதாரணமாக, வளசரவாக்கம் சென்னை ராதாக்ருஷ்ணன் சாலையில் பெரியார் பூங்காவுக்கு  எதிரே குப்பைகளை மலை போல குவித்து இருக்கிறார்கள். சாக்கடை கழிவுகளும், ஆங்கங்கே வீடுகள் இடிக்கப்பட்ட கல், மண் யாவும் இவையில் கலந்து மழை நீர் கலந்து ஒரு பெரிய மேடு போல காட்சி அளிக்கிறது.

கொசுத் தொல்லையும் அதிகரித்து உள்ளது. 

 மருத்துவர்கள் அலுவகங்களில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது. 
 மருந்துக் கடைகளில் பல்வேறு வியாதிக்கான மருந்துகள் பலசரக்கு போல விற்பனை ஆகிறது. 

  சுத்தம், சுகாதாரம் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு நகராட்சி, சென்னை அரசு  இவற்றில் மேல் பதவிகள் வகிக்கும் அலுவலர்களுக்கு என்று ஏற்படும்  !!

   அன்றாடம் வீதிகளில் உள்ள சாக்கடை கழிவுகளையும் குப்பைகளையும் அகற்ற வேண்டும் என்ற கடமை உணர்வு என்றுதான் ஏற்படும் ??

     நகராட்சியில் உள்ள கவுன்சிலர்கள் இதற்கான முயற்சிகள் எடுப்பார்களா ?

Wednesday, June 15, 2011

A shocking Feed Back !!!

Quite recently, I had occasion to visit Vijaya Health Care Centre, Vadapalani twice. First to consult a gastro enterologist surgeon to elicit his expert opinion on likely bilateral herniaplasty for my wife and secondly after a month or so later to visit the emergency ward to admit my wife for AGE ( acute gastero enteritis) .

In both instances, the advices from the expert  gastroenterologist surgeon as well as the medical treatment and care given by the Hospital were indeed more than what I could describe SATISFACTORY .

Nevertheless, what was shocking indeed the auxillary support services on whom the hospital administration depends such as the reception and the sanitation aspects. 

I am not here even to speak on the lack of water supply at the toilet for one full day in a delux room for which they charge as much as Rs.2350 per day. My wife was admitted for vomitting and diarrohoea and even a pan was not provided at the bed side for which this old man as an attendant has to run hither and thither to catch the attention of an ayah to beg for a vessel .  That no nurse will come forward to help a patient while she is vomiting is another matter, for they feel, if i am not wrong,  the very purpose of the attendant is to take care of this aspect. 

But what is then shocking which I am revealing???

As an outpatient, one has to register and when I hardly filled up the form and handed over the same with the requisite fee of Rs.100/- I was asked to sign on a feed back form, on which I was asked to sign on the dotted lines in the bottom portion .  This feed back was about the attention visitors get at the reception counter, the provision of accommodation, hygeine conditions at the outpatient wards/ counters, the reception and the perhaps the quality of attention we get from the  doctor/consultant.
The feed back form provided columns from HIGHLY SATISFACTORY to NOT SATISFACTORY, if i recollect correctly, five levels.   As I hesitated to sign a blank form virtually allowing the person sitting on the other side to fill up as it suited them, I heard them saying that I need not sign it if I am not interested in signing a blank form.  I left the counter.

This had barely left my mind, as I had to enter the portals of the hospital within the next one month or so, to the emergency ward to admit my wife for AGE. She was monitored for full two hours at the emergency ward before being shifted to the regular ward.  She was there for full three days.  I may at the cost of repetition state that the quality of medical care and nursing was much much more than SATISFACTORY LEVELS.

What was appalling, however, that on the last day, when the patient was to be discharged, I was asked to sign again on A BLANK FEED BACK FORM. The official who brought the discharge summary and the feed back form said that there is not much to be said in the feed back form as they would fill it up . 
When I insisted that I cannot sign a blank form the official hesitatingly allowed me to fill up.  

What feed back it could be  when the customer is not allowed to fill up the various columns or not even allowed to read what is written on the feed back form .  Is not the top Management team aware of the ground level realities?  Or, if they are aware, ( I can honestly say that it does not appear that the ground level officials do not act on instructions from the top) or the management itself deceiving themselves !!

God only knows !!!




Tuesday, May 31, 2011

நாம் எந்த பக்கம் ?

பங்கு வர்த்தக சந்தைகளை பற்றி எழுதுவோம் என்று நினைத்துதான் இந்த வலைதனைத் துவங்கினேன். எனினும் சிறிது நாட்களிலேயே அத்துறையில் அத்திசையில் எனக்கு இருந்த ஈடுபாடு குறைந்துவிட்டது. 

எப்போது பார்த்தாலும் கரடிக்கும் காளைக்கும் இடையே ஒரு போராட்டம். 

ஒரு நாள் இவர்கள் வெற்றி என்றால் அடுத்த நாள் அவர்களுக்கு கொண்டாட்டம். 

சற்று யோசித்துப்பார்த்தால், மனித வாழ்வே இது போலத்தானே. 

ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் போலே, .உலகத்திலே இரு வேறான மக்கள்  எப்போதுமே இருக்கிறார்கள். எல்லாத்துறையிலுமே. அரசியல், கல்வி, மருத்துவம், சட்டம், சுகாதாரம், வணிகத்துறையிலும்,   நாணயமாய் பொருள் ஈட்டும் நபர்கள் ஒருபக்கம் என்றால் பொதுப் பணத்தை அவர்கள் அறியா வண்ணம் கொள்ளை அடிக்கும் இன்னொரு கூட்டம். மருந்துகள் தயாரிப்பதிலே அதை விநியோகிப்பதில் ஏற்படுகின்ற தில்லு முல்லுகளைப் பார்த்து நெஞ்சம் கொதிக்கின்றது இல்லையா ? மாம்பழத்தில் கூட அதை பழுக்க வைப்பதில் கார்பைட் கலந்து அதை சீக்கிரம் பழுக்கவைத்து விற்பனை செய்து மக்களுக்கு இன்னல் ஏற்படுத்தும் ஒரு கூட்டம். பாலில் கலப்படம் செய்யும் இன்னொரு கூட்டம்.

தனியார் மருத்துவகங்களில் தேவையே இல்லாத சோதனைகளைச் செய்யச்செய்து உடல் நலம் குறைந்தவருக்கு அது போதாது என்று அவர்கள்  மன நலத்தையும் கெடுக்கும் உக்தி சொல்வோர் அரை குறை மருத்துவர் ஏராளம்.  பொதுவாக, மருத்துவர்கள், ஒரு மருந்து தரும்போது அது ஏற்படுத்தும் பின் விளைவுகளைப் பற்றி சொல்வதில்லை. ஒரு அறுவை சிகிச்சை  செய்யும்போது அதன் பக்க விளைவுகளைப் பற்றி குறிப்பிடுவதில்லை.  விவரங்கள் கேட்டால் அதை சொல்வதற்கு மருத்துவர்களுக்கு நேரமும் இல்லை. பொறுமையும் இல்லை.

வணிகத்தை எடுத்துகொண்டால், எந்த பொருளை விற்பனை செய்தாலும், விற்பனை செய்யும்பொழுது அதில் இருக்கும் குறைபாடுகளை பற்றி சொல்வது இல்லை. அதனால் ஏற்படும் வருடாந்தர  செலவினங்களைப் பற்றி, மற்றும்  விற்பனை செய்யப்படும் பொருளின் சராசரி ஆயுள் என்ன என்று சொல்வதில்லை. இவற்றில் வீட்டுக்கு தேவையான எல்லாமே அடக்கம்.

பொதுவாக, பொது வாழ்வில், நாநயம் பெருகி இருக்கிறது. ஆனால், நாணயம் குறைந்து விட்டது. மனித நேயம் மக்களுக்கு மறந்து விட்டது போலும் !!!

  மனித நேயத்தைக் காக்க வேண்டிய ஆன்மீக வாதிகளும் இரண்டு பட்டு நிற்கிறார்கள். சத்தியத்தைக் காக்க வேண்டியவர்களும்,  தர்மத்தை நிலை நிறுத்த வேண்டியவர்களும், சத்யம் வத, தர்மம் சர என்னும் விதிகளுக்கு உட்பட்டு நடக்கவேண்டியவர்களும்,   சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாய் நடக்கக் கண்டு, இவர்களையா நாம் மகான் என்று நினைத்தோம் என  பொது மக்கள் வேதனைப் படுவதையும் பார்க்கிறோம். 
          

  அவ்வப்போது தீங்கு செய்வோரைப் பற்றியும் அவர்கள் தண்டிக்கப்படுவதைப் பற்றியும் செய்திகள் வருகின்றன. ஆனாலும் தீமை குறைவதாக தெரியவில்லை. 

  நல்லவைக்கும் தீயவைக்கும் இடையே ஒரு போர் நிகழ்ந்துகொண்டே தானே இருக்கிறது. உடலிலே நல்ல பாக்டீரியா, கெட்ட பாக்டீரியா தொடர்ந்து இருப்பது போலே மனிதனின் உள்ளத்திலும் நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களும் தொடர்கின்றன. அது போலே உலகத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் ஒரு தொடர் சீரியல் போல இருந்து கொண்டே இருக்கிறார்கள்.

     காலப்போக்கில், நல்லது என்றால் என்ன கேட்டது என்றால் என்ன என்பதன் பொருளே மாறி வருகின்ற நிலைமை.

     பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. அருள் இல்லார்க்கோ அவ்வுலகம் இல்லை என்றார் வள்ளுவர்.  அதைப் பிறகு பார்த்து கொள்ளளலாம் என்று இன்றைய மாந்தர் நினைக்கிறார். 
  
  அல்லவை நீங்க வேண்டும் நல்லவை நடக்க வேண்டும் என வேண்டுவோர் ஒரு பக்கம். 

   அல்லவை கொண்டு வரும் பொருளில் மயங்கி அதன் பால் தன மனசாட்சிதனை அடகு வைத்து பொருள் ஈட்டுவோர் இன்னொரு பக்கம். 

   அல்லவைதனை எதிர்த்து போராட வேண்டும் என நினைப்போர் இன்னொரு பக்கம்.  நினைப்போடு இல்லாமல், சொல்லிலும் செயலிலும் அதை வலிந்து முனைப்போடு இருப்போர் கடைசி பக்கம். 

   நாம் எந்த பக்கம் ?